vikram [File Image]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் சிந்துபாத் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாம். இந்த சுவாரசியமான தகவலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ” செல்வராகவன் சார் இயக்கத்தில் விக்ரம் சார் சிந்துபாத் என்ற படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் அந்த சமயம் போய்க்கொண்டு இருந்தது. அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளராக நான் தான் கமிட் ஆகி இருந்தேன். படத்திற்காக இசையமைக்கவும் ரெடி ஆகிவிட்டேன்.
நடிகை சிம்ரன் மகன்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!
படத்திற்காக இசையமைத்து ஒரு பாடலான நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடலை இசையமைத்தேன். ஆனால், சிந்துபாத் படம் பாதியில் கைவிடப்பட்டது. பிறகு அந்த பாடல் வேஸ்ட் ஆக கூடாது என்பதால் நான் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திற்கு அதே பாடலை கொடுத்தேன்” என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கும் செல்வராகவனும், எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதில் நடிக்க கூடிய விக்ரம் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினால் அந்த படம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதனை பற்றி சொல்லியா தெரியவேண்டும்? கண்டிப்பாக அந்த படம் உருவாகி இருந்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும் என்றே கூறலாம். இருந்தாலும் இவர்கள் இருவரும் இணையவுள்ள அந்த படம் நின்றுபோனது ரசிகர்களை சோகம் ஆக்கியுள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…