gv prakash helps [File Image]
நடிகரும், இசையமைப்பாளருமான G.V.பிரகாஷ், சிறுவன் ஒருவருக்கு பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக அடியே படத்தில் நடித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெபல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியானது.
நடிப்பு, இசையமைப்பது என பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நிதியுதவி கோரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.75,000 அனுப்பிய ஜி.வி.பிரகாஷ், என்னால் முடிந்த சிறிய உதவி என குறிப்பிட்டுள்ளார்.
சமூக பயனரான அமீர் என்பவர், தனது X தள பக்கத்தில், ஆன்லைன்ல பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு. இருந்தாலும் கேக்குறேன், என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு கண்டறிய பட்டுள்ளது. கொஞ்சம் பயமா தான் இருக்கு. நேற்று இரவு ராம்நாட்டில் இருந்து மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனோம்.
இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!
அவங்க என்னன்னா உடனே… ஆப்பரேஷன் பன்னனும்னு சொல்றாங்க. ஆப்பரேஷனுக்கு 3.5 முதல் 4 லட்சம் வரை ஆகும்னு சொல்றாங்க. எங்க குடும்பத்திலிருந்து 2 லட்சம் வரை ரெடி பண்ணிட்டேன். கொஞ்சம் டைம் கொடுத்தா கூட அங்க இங்கனு எப்படியாச்சும் ரெடி பன்னிருவேன். உடனே பன்ன சொல்றாங்க, உங்களால எதாச்சும் முடிஞ்சா பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ் என்று பண உதவி கோரியர்ந்தார்.
இதனையடுத்து, பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவந்த நிலையில், ஒரு வயது குழந்தையின் சிறுமூளைக்கு அருகில் உள்ள கட்டியை அகற்ற மருத்துவ உதவி கேட்டவருக்கு தன்னுடன் பங்காக ஜி.வி.பிரகாஷ், 75,000 ரூபாய் அனுப்பி உதவி கரம் நீட்டியுள்ளார். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் உதவி செய்ததை அறிந்த பலரும், சமூக வலைத்தளங்கில் ஜிவிக்கு தங்களது பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…