கோட் படத்தை தொடமுடியாத குட் பேட் அக்லி! வியாபாரத்தில் கெத்து காட்டிய விஜய்?

Published by
பால முருகன்

சென்னை : கோட் படத்தை விட குட் பேட் அக்லி குறைவான விலைக்கு ஓடிடியில் விற்பனை ஆகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கு வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது, படத்தின் ஓடிடி விற்பனை, ஆடியோ விற்பனை ஆகியவை தான். அந்த வகையில், குட் பேட் அக்லி படம் ஓடிடியில் எவ்வளவு கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது எந்த ஓடிடி வாங்கியுள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட 95 கோடி கொடுத்து படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தான் அஜித்தின் சினிமா கேரியரில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும், குட் பேட் அக்லி படத்தால் விஜயின் கோட் படத்தை தொட முடியவில்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால், விஜய் நடித்துள்ள கோட் படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 110 கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் மூலம் குட் பேட் அக்லி படத்தை விட கோட் படம் தான் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விஜய் நடித்து முடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, அஜித்குமார் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago