அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ், நயன்தாரா நடித்த ‘கோல்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நடிகர் ப்ரித்விராஜ், நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் “கோல்ட்”.பிரித்விராஜ் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் கிருஷ்ணா சங்கர், அஜ்மல், மல்லிகா சுகுமாரன், ரோஷன் மேத்யூ, சுரேஷ் கிருஷ்ணா,செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி காட்சியில் நடிக்க ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக பேசிய ‘பருத்திவீரன்’ பிரியாமணி.!
முன்னதாக இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியீட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்திற்கான வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதற்கான ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது “கோல்ட்” படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ் & மலையாளத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 2022 டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…