“G.o.a.t மங்காத்தா படத்தை விட 100 மடங்கு தரமா இருக்கனும்”: வெங்கட் பிரபுவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்.!

Published by
பால முருகன்

சென்னை : தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தை விட விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படம் 100 மடங்கு தரமாக இருக்க வேண்டும் என, நடிகர் அஜித் குமார் தன்னிடம் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையேயான நட்பு, ஒருவருக்கு மற்றொருவரிடம் இருக்கும் மதிப்பு மற்றும் மரியாதை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில், தான் அஜித் குமாரை வைத்து மங்காத்தா படம் இயக்கி வரும்போது, “நீ விஜயை வைத்து கண்டிப்பாக சிறந்த ஒரு படம் இயக்க வேண்டும்”என அவர் தன்னிடம் கூறியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

அவர் சொன்ன வார்த்தையை சாத்தியம் ஆக்கும் வகையில் G.o.a.t படம் எனக்கு ஒரு வாய்ப்பை உறுவாக்கிக் கொடுத்தது என தெரிவித்துள்ள வெங்கட் பிரபு,இது குறித்து அஜித்திடம் கூறியபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், எத்தனை வருடங்களாக உன்னிடம் நான் கூறி வந்தேன்.. சரி படத்தை தரமாக எடுத்து முடித்து விடு என தனக்கு அட்வைஸ் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்

சரி அஜித் குமார்தான் விஜய் மீது அன்போடும், அக்கரையோடும் இருக்கிறார் என்று பார்த்தால், விஜயும் அஜித் குமாரின் நலனிலும், நட்பிலும் ஆதரவோடுதான் இருக்கிறார் என்பது வெங்கட் பிரபு கூறிய மற்றொரு தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சமீபத்தில் அஜித் குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது அனைவருக்கும் தெரியும், அப்போது படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் வெளியூரில் இருந்தபோது, தொலை பேசி வாயிலாக அஜித் குமாரை அழைத்து நலம் விசாரித்ததாகவும், இருவரும் நீண்ட நேரம் சிரித்து, மகிழ்ந்து பேசிக்கொண்டதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இருவரும் பேசிக்கொள்வதை பார்த்தபோது ஒரு ரசிகனாக தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய வெங்கட் பிரபு, இருவரும் சிறந்த நண்பர்கள் என்பது உலகத்திற்கு புலப்படாத உண்மை எனவும் கூறியுள்ளார். அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே மிக சிறந்த மனது எனக்கூறியுள்ள வெங்கட் பிரபு, G.o.a.t படம் மங்காத்தாவை விட 100 மடங்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இயக்கியுள்ளதாகவும், அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கங்களில் இரு அணியாக பிரிந்து முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து பகை வளர்க்கும் நிலையில், அணியின் ஆணி வேர்களாக இருக்கும் அவர்கள் இருவரும் மனித மாண்போடுதான் இருக்கிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

4 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

6 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

6 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

7 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

7 hours ago