இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கிறது என்று கூட சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆக்சன் ஹீரோவாக இருந்த சரத்குமாருக்கு இந்த படத்தில் பெரிய அளவில் சண்டை காட்சிகளே இருந்திருக்காது. அதேபோல கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து மக்களுக்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது படத்திற்கு சரியாக செட் ஆகவில்லை இப்படியான பல காரணங்களே இந்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூட கூறலாம்.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்று பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுவேன். ஒன்று என்னவென்றால் படத்தில் நடிகை ஜோதிகா வில்லி பாத்திரத்தில் நடித்தது தான்.
ஏனென்றால் ரசிகர்கள் அவரை அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த காரணத்தால் அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சரியாக இல்லை ஒரு பத்து நிமிடம் முடிவதற்கு முன்னாடியே படத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் சரத்குமார் சார் அவருக்காக ஒரு சண்டைக்காட்சியை வைத்தேன். அது தப்பாக போயிட்டு இதுதான் படத்தின் தோல்விக்கான காரணம்” எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…