Silambarasan TR and dhanush [file image]
சினிமாவில் பொதுவாக நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை சில நடிகர்கள் கேட்டுவிட்டு நடிக்காமல் தவறவிட்டு பிறகு அந்த கதையை வேறு நடிகரிடம் சொல்லி அந்த நடிகர் படத்தில் நடித்து படம் சூப்பர் ஹிட் ஆனது உண்டு. அப்படி இதுவரை பல படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் சிம்பு அழகாக நடித்திருப்பார் என்றே கூறலாம். படம் சிம்புவுக்காக எழுதப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் போலவே இருக்கும். ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்ததே நடிகர் சிம்பு இல்லையாம். படத்தில் முதலில் நடிகர் தனுஷ் தான் நடிக்கவிருந்தாராம். படத்தின் கதையை இயக்குனர் கெளதம் மேனன் முதலில் தனுஷிடம் தான் கூறினாராம்.
ஆனால், அந்த சமயம் தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி வந்த காரணத்தால் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். ஆனால், அப்போது அவர் தனுஷிடம் கூறியிருந்த கதை வேறு மாதிரி இருந்தாம். ஒரு பக்கத்துக்கு வீட்டில் பையன் எப்படி இருப்பாரோ அதே போலவே கதையை எழுதி இருந்தாராம்.
விஜய் மகன் சஞ்சய் செய்த செயலால் கடுப்பான லைக்கா! படம் ஆரம்பிக்கும் போதே இப்படியா?
பிறகு தனுஷ் நடிக்க முடியாது என்று தெரிந்தவுடன் கெளதம் மேனன் கதையை சிம்புக்கு ஏற்றபடி சிறிது மாற்றம் செய்து அவரிடம் கூறினாராம். அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தில் நடித்தாராம். படமும் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை பதிவு செய்தது. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் முதலில் தனுஷ் நடிக்கவிருந்த தகவலை கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் பெரிய அளவில் விமர்சனத்தை பெறவில்லை. மேலும், கெளதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் வெளியாகவில்லை அந்த படமும் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…