தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், ாலும் கட்சியை மறைமுகமாகவும், ஒரு சில இடங்களில் நேரடியாகவும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தளபதி விஜயின் பேச்சு சமூக ஊடங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு வந்த விஜய் ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இதனை மற்ற நடிகர்கள் விமர்சித்து வருகிற நிலையில், விஜயின் தீவிர ரசிகரான, நடிகர் சந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில் காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் வந்தது என்றால், எந்த பெரிய மனிதர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறுக்கு மேல் இடத்தில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…