தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், ாலும் கட்சியை மறைமுகமாகவும், ஒரு சில இடங்களில் நேரடியாகவும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தளபதி விஜயின் பேச்சு சமூக ஊடங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு வந்த விஜய் ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இதனை மற்ற நடிகர்கள் விமர்சித்து வருகிற நிலையில், விஜயின் தீவிர ரசிகரான, நடிகர் சந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில் காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் வந்தது என்றால், எந்த பெரிய மனிதர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறுக்கு மேல் இடத்தில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…