இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றியுள்ளார்.
இந்த திரைப்படம் வெளியான ஆண்டில் மக்களிடம் சரியாக சேரவில்லை என்றே கூறலாம். அடுத்தாக ரீ ரிலீஸ் செய்தவுடன் அனைவரும் வியந்து செல்வராகவன் மற்றும் படக்குழுவை பாராட்டினார்கள் என்றே கூறலாம்.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் அதில் நடிகர் தனுஷ் நடிப்பார் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 விற்கு இசையமைப்பாளர் நீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து அவர் கூறியது ” ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு என்னை அழைத்தாள் கண்டிப்பாக இசையமைப்பேன்…என்னை கூப்டற மாதிரி தான் சொல்லுறாங்கள்..அந்த படம் தொடங்கி..தயாரிப்பாளர் சரியாக அமைந்து படத்தை கையெழுத்துசெய்வது வரை நான் கிடையாது..கண்டிப்பாக நான் படத்தில் இருக்க 90% வாய்ப்பு இருக்கு” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…