சினிமா

இத்தனை கோடி கொடுத்தால் ஓகே! பிரதீப் ரங்கநாதனின் சம்பளத்தை கேட்டு தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்!

Published by
பால முருகன்

லவ் டுடே திரைப்படத்தில் நடித்த தன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக சினிமா துறையில் ஒரு நடிகர் அல்லது ஒரு இயக்குனர்கள் தங்களுடைய முதல் படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்ததாக அடுத்தடுத்த படங்களில் தங்களுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்துவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி லவ் டுடே படத்திற்கு பிறகு ஒரு பத்து நிறுவனம் பிரதீப் ரங்கநாதனிடம் தங்களுடைய நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்களாம்.

ஆனால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் 20 கோடி கொடுங்கள் நான் நடிக்கிறேன் என்று அதிரடியாக கூறுகிறாராம். இதனால், பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்ல போகும் தயாரிப்பாளர்கள் தெரித்தோடுகிறார்களாம். மேலும், அப்படி தான் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க கூட 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

இன்னும் இந்த திரைப்படத்தினை எந்த நிறுவனமும் தயாரிக்கவும் முன் வரவில்லையாம். படத்தினை தற்காலிமாக கை காசு போட்டு விக்னேஷ் சிவன் தான் தயாரித்து வருகிறாராம். முன்னதாக இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தினை தயாரிக்கவிருந்தது. படத்தின் கதையும் கமல்ஹாசனுக்கு பிடித்துப்போக தயாரிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

கமல்ஹாசனுடன் இணையும் ‘லவ் டுடே’ பிரதீப்.! பட்ஜெட் மட்டும் இத்தனை கோடிகளா.?

பிறகு பண பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து கமல் நிறுவனம் விலக 7 ஸ்க்ரீன் நிறுவனம் அந்த திரைப்படத்தினை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

1 hour ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

2 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

3 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

4 hours ago