சினிமா

இத்தனை கோடி கொடுத்தால் ஓகே! பிரதீப் ரங்கநாதனின் சம்பளத்தை கேட்டு தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்!

Published by
பால முருகன்

லவ் டுடே திரைப்படத்தில் நடித்த தன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக சினிமா துறையில் ஒரு நடிகர் அல்லது ஒரு இயக்குனர்கள் தங்களுடைய முதல் படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்ததாக அடுத்தடுத்த படங்களில் தங்களுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்துவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி லவ் டுடே படத்திற்கு பிறகு ஒரு பத்து நிறுவனம் பிரதீப் ரங்கநாதனிடம் தங்களுடைய நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்களாம்.

ஆனால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் 20 கோடி கொடுங்கள் நான் நடிக்கிறேன் என்று அதிரடியாக கூறுகிறாராம். இதனால், பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்ல போகும் தயாரிப்பாளர்கள் தெரித்தோடுகிறார்களாம். மேலும், அப்படி தான் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க கூட 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

இன்னும் இந்த திரைப்படத்தினை எந்த நிறுவனமும் தயாரிக்கவும் முன் வரவில்லையாம். படத்தினை தற்காலிமாக கை காசு போட்டு விக்னேஷ் சிவன் தான் தயாரித்து வருகிறாராம். முன்னதாக இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தினை தயாரிக்கவிருந்தது. படத்தின் கதையும் கமல்ஹாசனுக்கு பிடித்துப்போக தயாரிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

கமல்ஹாசனுடன் இணையும் ‘லவ் டுடே’ பிரதீப்.! பட்ஜெட் மட்டும் இத்தனை கோடிகளா.?

பிறகு பண பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து கமல் நிறுவனம் விலக 7 ஸ்க்ரீன் நிறுவனம் அந்த திரைப்படத்தினை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

42 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

48 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago