ஊரடங்கு உத்தரவால் ரத்தாகும் திரைப்பட விழாக்கள்!

கோவா மற்றும் சென்னை திரைப்பட விழாக்கள் உட்பட அனைத்து விழாக்களும் ரத்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகாய்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள், படப்பிடிப்புகள் மற்றும் திரைப்பட விழாக்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, ஜூன் மாதத்தில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து முடிந்த பின்பு தான் மற்ற திரைப்பட விழாக்கள் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கோவா மற்றும் சென்னை திரைப்பட விழாக்கள் உட்பட அனைத்து விழாக்களும் ரத்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!
March 14, 2025
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் நேரலை!
March 14, 2025
“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!
March 13, 2025