Categories: சினிமா

Mark Antony: மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கம் – பெருமூச்சு விட்ட படக்குழு!

Published by
கெளதம்

நடிகர் விஷால் நடிப்பில் செப்டம்பர் 15 வெளியாகவிருக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், படக்குழு நிம்மதி அடைந்துள்ளது.

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என லைகா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிறந்துள்ளது.

ஏற்கனவே, லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் ரூ.21.29 கோடி கொடுக்கப்படவேண்டி இருந்த நிலையில், அதில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி முன்னதாக உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, இன்னும் அந்த தொகையை விஷால் செலுத்தாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.

இதன் அடிப்படையில், லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்திருந்தது. இதனால், படக்குழு மிகவும் பதட்டத்தில் இருந்து வந்தது. அது மட்டுமின்றி, உயர்நீதிமன்ற உத்தரவுகளை இன்னும் விஷால் அமல்படுத்தவில்லை என்ற காரணத்தால், இன்று நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கமளித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் விஷால் நேரில் ஆஜராகவும், விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago