சினிமா

தியேட்டரை நாசமாக்கிய ரசிகர்கள்! வருத்தத்தில் உரிமையாளரை நேரில் அழைத்த விஜய்?

Published by
பால முருகன்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வெளியானது. படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் படத்தின் ட்ரைலராவது ரசிகர்கள் பிரமாண்டமாக பார்த்து ரசிக்கவேண்டும் என பல பெரிய திரையரங்குகளில் வெளியே திரை வைத்து ட்ரைலர் காட்சிப்படுத்தப்பட்டது.

அதைப்போலவே, திரையரங்குகளுக்கு உள்ளேயும் டிரைலர் போடப்பட்டது. அந்த வகையில், டிரைலர் காண சென்னையில் உள்ள  ரோகினி  திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது என்றே கூறலாம். டிரைலரை பார்த்தது மட்டுமின்றி திரையரங்குகளில் இருந்த இருக்கைகளை எவ்வளவு சேதப்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தினார்கள்.

ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை என்ற காரணத்தால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதன் காரணமாக கோபத்தில் சம்மபந்தமே இல்லாமல் திரையரங்கு இருக்கைகளை சேதம் செய்த்துவிட்டு வெளியே வந்து இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்றால் இப்படி தான் என்பது போல சில ரசிகர்களும் பேசி இருந்தார்கள்.

விஜய் ரசிகர்கள் இப்படி திரையரங்குகளின் இருக்கைகளை சேதப்படுத்தியது குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரபல தயாரிப்பாளரான டி.சிவா பேட்டி ஒன்றில் விஜயின் உண்மையான ரசிகர்கள் யாரும் இப்படி செய்யமாட்டார்கள் எனவும் காட்டத்துடன் பேசி இருந்தார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விஜய்க்கு தகவல் தெரிவிக்க விஜய் இந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளாராம். வேதனையுடன் ரோகினி  திரையரங்கின் உரிமையாளரை நேரில் அழைத்துள்ளாராம். நேரில் அழைத்து இந்த சம்பவம் குறித்து பேசி அதற்கான தொகையை அவரும் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் விஜய்யை அனைவர்க்கும் பிடிக்கிறது என புகழந்து தள்ளி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

6 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

30 minutes ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

1 hour ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

10 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

12 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

13 hours ago