பஞ்சாப்பின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா நேற்று பஞ்சாபின் மன்சா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அவரின் இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர். சித்து மூஸ்வாலா தனது இரண்டு நண்பர்களுடன் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் சென்ற கார் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்துள்ளது. காயமடைந்த அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பல அசத்தலான பாப் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த சித்து மூஸ் வாலா பாடகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மன்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
விஐபி கலாச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் பஞ்சாப், பகவந்த் மான் அரசு சித்து மூஸ் வாலா உட்பட 424 விஐபிக்களின் பாதுகாப்பை திரும்ப பெற்றது. பாதுகாப்பை திரும்ப பெற்ற மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. இவரது மறைவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…