Categories: சினிமா

குடிபோதையில் விபத்து…குழைந்தைகளுடன் உயிர் தப்பிய பிரபல பாடகி சின்மயி!

Published by
கெளதம்

பிரபல பாடகி சின்மயி விபத்து ஒன்றில் சிக்கி கொண்டதாக தனது X தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகளில் ஒருவரான சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையயில் இவர் பாடிய முதல் பாடல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்த பாடும் வாய்ப்புகள் கிடைத்தது.

கடந்த 2014ல் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை மணந்தார். திருமணமாகி நீண்ட ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி, சின்மயி தனது இரட்டை குழைந்தைகளான டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டதாக வதந்திகள் பரவியது. ஆனால், அந்த குழந்தைகள் பற்றி பரவிய தவறான வதந்திகளுக்கு முறையான விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

இவர், பின்னணி பாடகி மட்டும் மல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். கடைசியாக, நடிகை சமந்தா நடித்த யசோதா, குஷி ஆகிய திரைப்படங்களுக்கு ஹிந்தி மற்றும் தெலுங்கு வெளியீடுகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர், நடிகை சமந்தாவின் நெருங்கிய நண்பர் என்றே கூறலாம்.

இந்நிலையில், நேற்று மாலை விபத்து ஒன்றில் சிக்கி கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து தனது பதிவில், தன் குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, குடிபோதையில் வந்த ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் வந்து தனது கார் மீது மோதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது காரை இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்தும் சென்றுவிட்டது. ஆனால், விபத்தின்போது, ஆட்டோ ஓட்டி வந்த நபருக்கும் ஒன்றும் ஆகவில்லை, தங்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை என தெரிவித்ததோடு, “நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகின்றோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்று தனது குறிப்பில் சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago