ஜெய் பீம் தொடர்ந்து அடுத்த பிரச்சனைக்கு தயாரான சூர்யா.! இதுக்கு என்ன நடக்க போகிறதோ?!

Default Image

பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு தான் எதற்கும் துணிந்தவன் கதைக்களம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் இருக்கிறது.

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மீதான சர்ச்சை தற்போது வரையில் குறையவில்லை. அதன் மீதான வாதங்கள் இன்னும் தமிழகத்தில் நடந்தவண்ணம் தான் இருக்கிறது. நேற்று தான் படத்தின் இயக்குனர் கூட அறிக்கை வெளியிட்டு இருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அடுத்ததாக சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பற்றிய கதைக்களமாம். அடுத்தடுத்து உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட படத்தில் சூர்யா தைரியமாக நடித்து வருகிறார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தான் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். படத்தின் ட்ரைலர், அல்லது படம் வெளியானால் தான் அதில் எந்த பிரச்சனை பற்றி பேசியுள்ளார் என்பது தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்