சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பொங்கல் ரிலீஸ் ஆக வரும் என நினைத்த போது, தற்போது பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார், யுவன் இசையமைத்து உள்ளார். போனிகபூர் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்த படம் பொங்கல் என அறிவித்ததால், மற்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் தங்கள் ரிலீசை டிசம்பர் அல்லது பிப்ரவரிக்கு தள்ளிவைத்தன. ஏனென்றால், அஜித்தின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதனால், அப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருக்கும் என்பதும் ஒரு காரணம்.
ஆனால், கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம், இப்படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பொங்கல் தினத்திற்கு குடும்ப செண்டிமெண்ட் படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது எதற்கும் துணிந்தவன் படக்குழு, இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…