சினிமா

அட்லீயை பார்த்து அசந்து போன விஜய்! நண்பன் படப்பிடிப்பில் நடந்த இன்ப அதிர்ச்சி?

Published by
பால முருகன்

இயக்குனர் அட்லீ பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய மூன்று படங்களுமே விஜய்க்கு சரி அட்லீக்கும் சரி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்றே சொல்லவேண்டும்.

இதில் அவர் முதலில் ராஜா ராணி படத்தை இயக்கி முடித்த பின் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இது தான் அவர் விஜய்யை வைத்து இயக்கிய முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தின் கதையை கூறுவதற்கு முன்பே அதாவது 2012-ஆம் ஆண்டே விஜய் அட்லீயிடம் தனக்கு கதை ரெடி செய்ய சொல்லி கேட்டுவிட்டாராம்.

2000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட அட்லீ! டாப் ஹீரோக்களை வைத்து பிரமாண்ட ஹாலிவுட் படம்?

அந்த சமயம் அட்லீ இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு விஜய்யுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பன் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அன்று அட்லீயை விஜய் கேரவனுக்கு அழைத்தாராம். கேரவனுக்கு வந்தவுடன் அவருக்கு ஒரு நாற்காலியை போட சொல்லி அட்லீயை அமர சொன்னாராம்.

பிறகு அமர்ந்தவுடன் அட்லீயை பாராட்டினாராம். பாராட்டி விட்டு இந்த படத்தில் நீங்கள் உங்களுடைய கேப்டன் சொன்னதை கேட்டு நன்றாக வேலை செய்து உள்ளீர்கள். உங்களுடைய வேலை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது எனக்காக ஒரு கதை தயார் செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் நாம் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று கூறினாராம்.

நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?

உதவி இயக்குனராக இருந்த அந்த சமயத்தில் அட்லீக்கு இது மிகவும் இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாம். அட்லீயை பார்த்து தனக்கு ஒரு கதையை தயார் செய்யுங்கள் என்றார் கூறிய முதல் நடிகரும் விஜய் தானாம். விஜய் தனக்கு ஒரு கதை தயார் செய்ய கூறியவுடன் அட்லீ மிகவும் உற்சாகம் அடைந்து அன்றிலிருந்து விஜயின் ரசிகராக மாறிவிட்டாராம். இந்த தகவலை அட்லீயே சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ தெரிவித்துள்ளார்.

விஜய் கூறிய பிறகு அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்தாக விஜய்யை சந்தித்து தெறி படத்தின் கதையை கூறி அவரை வைத்து படம் இயக்கினார். படமும் வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அட்லீக்கு விஜய்யை வைத்து மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

7 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

27 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

43 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

1 hour ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago