Categories: சினிமா

‘ஹே சினாமிகா’ திரைப்படத்திற்காக தமிழில் முதல் முறையாக பாடிய துல்கர் சல்மான்..!

Published by
Edison

மலையாள திரைப்படங்களில் அவ்வப்போது பாடல்களும் பாடிய மோலிவுட்டின் இளம் ஹீரோவான துல்கர் சல்மான், தற்போது கோலிவுட்டிலும் பின்னணி பாடகராக மாறியுள்ளார். 

தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார்.பிருந்தா மாஸ்டர், முதல் முறையாக இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற தமிழ் திரைப்படத்தில் துல்கர் சல்மான்,காஜல் அகர்வால், அதிதி ராவ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ஒரு பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார்.துல்கர் தமிழில் பாடும் முதல் பாடல் இதுவே ஆகும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள முதல் படம் ‘ஹே சினாமிகா’ என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்,பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார்.கார்க்கியின் வரிகளில் துல்கர் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

2013 இல் வெளியான மலையாள திரைப்படமான ‘ஏபிசிடி’ மூலம் துல்கர் பின்னணி பாடகராகவும் அறிமுகமானார்.பின்னர்,மலையாளத்தில் வெளியான சார்லி படத்தில் சுந்தரி பெண்ணை பாடலை பாடினார்.இப்பாடலானது தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற அனைத்து சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.துல்கர் சல்மான்,இதுவரை 8 பாடல்களை மலையாளத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தமிழில் முதல் முறையாக பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் துல்கர் பாடல் பாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

 

Published by
Edison

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

5 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

7 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

8 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

10 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

11 hours ago