ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

Published by
கெளதம்

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் தனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது.

அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஜெயிலில் போட வேண்டும் என கூறினார். இப்பொது, டாக்டர் அவ்வாறு கூறியதற்கு சமந்தா வேதனையுடன் கேள்வி கேட்டு இன்ஸ்டாகிராமில் நீண்ட விளக்கத்தை சுமார் 3 பக்கங்களுக்கு கொடுத்துள்ளார்.

சமந்தாவின் சர்ச்சைக்குள்ளான பதிவு : 

பொதுவான வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷனைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைத்திருந்தார், மேலும் அவர் சிகிச்சையில் ஈடுபடும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

Samantha – Instagram,[File Image]
மருத்துவரின் பதிவு : 

ஹெபடாலஜிஸ்ட் இந்த நெபுலைசேஷன் முறை, ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியது மட்டுமல்லாமல், சமந்தாவை “உடல்நலம் மற்றும் அறிவியல் படிப்பறிவற்றவர்” என்று கூறினார். அதோடு, இது போல பொது சுகாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக நடிகைக்கு “அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது ஜெயிலில் தள்ளப்பட வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

 

சமந்தாவின் விளக்கம் :

கடந்த இரண்டு ஆண்டுகளில், நான் பல வகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. நான் கடுமையாக அறிவுறுத்தப்பட்ட அனைத்தையும் முயற்சித்தேன். இந்தச் சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்.

தற்போது இருக்கும் மருத்துவ முறைகள் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது. அனைவராலும் இவ்வளவு செலவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. என்னை போல இந்த நோயின் தாக்கத்தினால் அவதிப்படுபவர்களுக்கு உதவவே இந்த பதிவுகளை வெளியிடுகிறேன். இது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவது அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஆனால், ஒரு ஜென்டில்மேன் ஒரு மருத்துவர் எனது பதவியையும் எனது நோக்கங்களையும் வலுவான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். ன்றும் கூறினார். அவருடைய நோக்கங்கள் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் தனது வார்த்தைகளால் தூண்டிவிடாமல் இருந்திருந்தால், அது அவருக்கு இரக்கமாகவும் இருந்திருக்கும்.  குறிப்பாக நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? எனது உடல்நிலை பாதிப்பிற்கான சிகிச்சைக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எந்த பயனும் இல்லை. ஆனால், மாற்றுமுறை மருத்துவத்தில் எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எனக்கு பலன் கிடைத்த மாற்றுமுறை மருத்துவத்தை ரசிகர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

இந்த சிகிச்சையை டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு பிரபலமாக இல்லாமல் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒருவனாக பதிவிட்டுள்ளேன். எனினும் எதிர்காலத்தில் கவனத்துடன் பதிவுகளை வெளியிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

3 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

4 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

4 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

5 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

7 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

8 hours ago