anushka shetty [file image]
அனுஷ்கா : ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட ரசிகர்கள் அப்படியே இருப்பார்கள். அந்த வகையில், அதில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
கடந்த சில வருடங்களாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் மூலம் ஹிட் கொடுத்து இருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்த்தில் இரண்டு நடித்து வருகிறார். இவை இரண்டும் சற்று வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் என கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு நடிகை அனுஷ்காவுக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். படத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் தருகிறோம் என்றும் கூறினார்களாம். ஆனால், படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறி அனுஷ்கா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், அந்த சமயம் இனிமேல் நடித்தால் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை கேட்டு மட்டுமே நடிக்கவேண்டும் என்கிற முடிவில் இருந்தாராம். அதன் காரணமாக தான் 5 கோடி கொடுத்தும் அந்த தெலுங்கு ஹீரோக்கு ஜோடியாக நடிக்கவும் மறுத்துவிட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், நடித்தால் விருப்பமான கதாபாத்திரம் கொண்ட படத்தில் நடிப்பேன் என்ற முடிவில் அனுஷ்கா இருப்பது தெரியவந்துள்ளது .
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…