pradeep antony Bigg Boss [file image]
பிக் பாஸ் தமிழ் 7-ல் இருந்து சக பெண் போட்டியாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. இதனை தொடர்ந்து, பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதெற்கு ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.
மேலும், அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் கேட்காததால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனி, அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியீட்டு வரும் நிலையில் தற்பொழுது, தனது ரசிகர்களுக்கு உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனது பெயரில் பண மோசடி நடந்த விட கூடாது என்ற எண்ணத்தில் ரசிகர்களுக்கு வேண்டிக்கொள் வைத்திருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் ஏழையாக இருக்கலாம். அதற்காக பிறரிடம் பணம் கேட்கமாட்டேன் என் பெயரை கெடுக்க நினைக்கும் சிலர் என் பெயரை பயன்படுத்தி ‘crowd funding’ல் ஈடுபட நேர்ந்தால், அது நான் என நினைத்து பணம் கொடுக்க வேண்டாம். மேலும், பிக் பாஸ் வீட்டில் யாருடனும் எனக்கு பிரச்னை இல்லை” என கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு வெட்கப்படவில்லை என்றும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். ‘பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதில் நான் ஒரு நபராக விளையாட்டின் ஒவ்வொரு நிமிடமும் நேசித்தேன்.
யாரும் எதிர்பார்க்கல! பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய பிக் பாஸ்?
எனவே ஒரு வழியில், பிக்பாஸ் விதிகளின்படி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் விலைமதிப்பற்ற பெரியது ஒன்றை நான் வென்றது போல் உணர்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது நிகழ்ச்சியில் மூலம் மிக்பெரிய அளவில் பிரபமடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…
சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…