Vijay Antony Megha Akash [file image]
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி எப்போது தனது மனதிற்க்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்.
அந்த வகையில், சமீபத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தில் மேகா ஆகாஷ் தன்னுடன் நடிக்க மறுத்துவிட்டார் என்று விஜய் ஆண்டனி உண்மையை உடைத்துள்ளார். இது குறித்து பேசிய விஜய் ஆண்டனி ” இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே எனக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க மேகா ஆகாஷ்க்கு வாய்ப்பு கிடைத்து இருந்தது.
அந்த படம் பெயரை சொல்ல நான் இப்பொது விரும்பவில்லை. வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அவர் என்னுடைய படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அந்த படத்தில் அவர் என்னுடன் நடிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் அவர் அந்த சமயம் மறுத்துவிட்டார். படம் பெயரை சொல்ல விரும்பவில்லை.
இருந்தாலும் நான் சொல்லும் இந்த தகவலை மனமுடைந்த விஜய் ஆண்டனி என்று எழுதி கொள்ளுங்கள் ” என நக்கலாக பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி ” இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக எங்கள் இருவருக்கும் அந்த அளவுக்கு பேச்சுவார்த்தை கிடையாது.
‘இந்த மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் மூலம் அவருக்கும் எனக்கும் பேசுவதற்கு பழகி கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இப்போது நண்பர்களாக மாறிவிட்டோம். இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பர் கிடைத்துள்ளார்” எனவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…