vijaysethupathi and ram charan [file image]
விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் எல்லாம் சமீபகாலமாக பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகிறது. குறிப்பாக அவர் கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு தொடர்ச்சியாக நடிகர் விஜய்சேதுபதிக்கு வில்லனாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறதாம். அதுவும் சிறிய படங்களில் எல்லாம் இல்லையாம் பெரிய பெரிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறதாம்.
அந்த வகையில், தற்போது ராம்சரண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் ஜெஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 16-வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த திரைப்படத்தில் வில்லனுக்கு சரியான ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் இருப்பதால் பவர்ஃபுல்லான ஒரு வில்லன் நடித்தால் நன்றாக இருக்கும் என பட குழு அவரிடம் கூறியுள்ளதாம்.
அதற்கு யோசிக்காமல் இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் சரியாக இருப்பார் என்று நடிகர் ராம்சரண் கூறி விட்டாராம். உடனடியாக படக்குழுவும் ராம்சரனுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்களாம். படத்தின் கதையையும் அவர் கேட்டுவிட்டு அருமையாக இருக்கிறது. நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினாராம்.
பிறகு படத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி கூற அதற்கு விஜய் சேதுபதி பல கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அதாவது வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் 15 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு பல குழுவும் ஒத்துக்கொள்ள அவர் படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டாராம். வழக்கமாக வில்லனாக நடிக்க 12 கோடியிலிருந்து 13 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி தற்போது படங்களில் வில்லனாக நடிப்பதற்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி கடைசியாக ஹீரோவாக நடித்த எந்த திரைப்படமும் சரியான விமர்சனத்தை பெறாத நிலையில், தற்போது ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி எதிர்பார்ப்பு அதிகமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…