தங்கலான் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? உண்மையை உடைத்த பா.ரஞ்சித்!!

Published by
பால முருகன்

தங்கலான் : விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் மும்மரமாக நடைபெற தொடங்கிவிட்டது.

அதன் ஒரு பகுதியாக படத்தின் பிரபலங்கள் அனைவரும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” பூ படத்தில் இருந்தே நான் பார்வதி நடிப்பை பார்த்து கொண்டு இருக்கிறேன். அந்த படம் மட்டுமின்றி அடுத்ததாக நான் பல படங்கள் பார்த்து இருக்கிறேன். அந்த படங்களை எல்லாம் பார்த்து தான் நான் இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தேன்.

நிறைய முறை நான் அவருடைய நடிப்பை பார்த்து என்னுடைய படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால், அது முடியாமல் போனது. இந்த முறை இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க சரியானகதாபாத்திரமும் வாய்ப்பும் கிடைத்தது. அவரை படத்தில் நடிக்க வைத்தேன். விக்ரம் மாதிரி நடிக்க ஒரு ஆள் படத்தில் இருக்கிறார் என்றால் அவருக்கு இணையாக நடிக்க வைக்க ஒரு நடிகை வேண்டும் என முடிவு செய்தேன்.

பார்வதியை படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தது போல, ராதிகா ஆப்தேவும் நடிக்க வைக்க யோசித்தேன். அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே, அவரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். பின் கடைசியில் படத்திற்கு  பார்வதி செட் ஆகிவிட்டார்” எனவும் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

17 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

1 hour ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

4 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

5 hours ago