vikram about kanguva [File Image]
ஹைதராபாத் : சூர்யா நடித்து வரும் கங்குவா படம் பல சாதனைகளை முறியடித்து புது சாதனைகளை படைக்கும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் நிச்சியமாக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவே பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தங்கலான் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்டபோது பேசிய விக்ரம்” மொத்தமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு 3 தொடர் பிளாக் பஸ்டர் படங்கள் அமையப்போகிறது. முதலில் ‘தங்கலான்’, அதற்கு அடுத்ததாக ‘கங்குவா’, பின் கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ என மூன்று படங்கள் தொடர் வெற்றியை அவருக்கு கொடுக்கும்” என பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய விக்ரம்” சூர்யாவின் கங்குவா படம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர் ” சூர்யாவின் கங்குவா படம் நிச்சியமாக பெரிய வெற்றி படமாக அமையும். வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடிக்கும்” என கூறினார்.
விக்ரம் மேடையில் கங்குவா படத்தை பற்றி பேசியதற்கு முக்கிய காரணமே தங்கலான் படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் கங்குவா படத்தையும் தயாரித்து இருக்கிறார். எனவே, தன்னுடைய படத்தினை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக விக்ரம் பேசினார்.
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…