நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார்கள், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவைடந்துள்ளது. ஏற்கனவே படத்தின் அணைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது. அதை இன்றே எடுத்து மொத்தமாக படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.
படப்பிடிப்பு முடிந்ததை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் படக்குழுவினருடன் கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா சமந்தாவிற்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, கம்மலை பரிசாக கொடுத்துள்ளார். அவர் கொடுத்த கம்மலின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது நன்றியை சமந்தா தெரிவித்துள்ளார்.
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…