நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2-படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறவேண்டும்.
பிரபல பாலிவுட் நடிகரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் 4-ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.
இது குறித்து அவர் பேசியது ” எனக்கு கேன்சர் இருப்பதாக மருத்துவர்கள் என்னிடம் கூறியவுடன் நான் அதிலிருந்து மீண்டு விடுவேன் என அவர்களிடம் சொன்னேன். ஆனா இந்த செய்தி எனக்கு தெரிய வந்ததும் என் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து 3 மணி நேரம் அழுதேன். அவர்களுடைய வாழ்கை என்ன ஆகிவிடுமோ பயந்துவிட்டேன்.
ஆனால் அதையே நினைத்து கொண்டு அப்படியே இருக்கவில்லை. இதிலிருந்து மீண்டு விடவேண்டும் என்ற யோசனை மட்டும் என்னிடம் இருந்தது. என்ன நடந்தாலும் பாசிட்டிவாக யோசித்தேன். என்னுடைய குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக குணமடைந்த என்னுடைய உடலை தான் பரிசாக அளித்தேன் நான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன்” என கூறியுள்ளார்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…