karthi [File Image]
ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்தப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது சூது கவ்வும் படம் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
படத்தில் எம்ஜிஆர் தீவிர ரசிகராக கார்த்தி நடிப்பதால், படத்திற்கு ‘வா வாத்தியரே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் இருக்கும் இந்த குட்டிஸ்கள் யார் தெரியுமா? அட இவங்களா இது!
தனது 26வது படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, ’96’ திரைப்பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் ‘கார்த்தி 27’ படத்திலும் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில், கார்த்தியுடன் நடிகர் அரவிந்த் சுவாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது. இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி – அரவிந்த்சாமி இருவருக்கு இடையே நடைபெறும் நண்பர்கள் சார்ந்த கதை தான் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுறது.
பூமிகா செய்த செயலால் செம கடுப்பான ஸ்ரீகாந்த்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
முன்னதாக, கார்த்தி ஹீரோயின் இல்லாமல் கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோடி இல்லாமல் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.
கார்த்தி 27 படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. கார்த்தி 27-க்குப் பிறகு, கார்த்தியின் முந்தைய வெற்றி திரைப்படங்கலின் இரண்டாம் பாகங்களான ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு 2024ல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…