குடும்பத்தை கவர்ந்த ‘மெய்யழகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மெய்யழகன் படத்தில் எந்தவித ஆக்‌ஷன் காட்சி மற்றும் நடனக் காட்சிகள் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

Meiyazhagan

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.

மெய்யழகன் ஆக்‌ஷன் காட்சி மற்றும் நடனக் காட்சிகள் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக கோலிவுட் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. மேலும் படத்தில், நடிகை ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்தார், அதே சமயம் ராஜ்கிரண் மற்றும் தேவதராஷினி ஆகியோர் படத்திற்கு வலு சேர்க்க முக்கிய வேடங்களில் நடித்தனர்.

மெய்யழகன் படம் தெலுங்கிலும் ‘ சத்தியம் சுந்தரம் ‘ என்ற பெயரில் வெளியாகி, தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் மூன்று படங்களுடன் போட்டி மற்றும் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்துடன் தெலுங்கில் கடுமையான போட்டியை எதிர்கொண்ட போதிலும், வசூலில் மடியவில்லை.

அதன்படி, மெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பிரபல சினிமா வர்த்தக நிறுவனம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழில் மொழியில் 3 கோடி வசூலும், தெலுங்கில் 2 கோடி என மொத்தமாக 5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

‘தேவரா’ படம் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்று வருவதால், தெலுங்கு மாநிலங்களிலும் மெய்யழகன் பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் இன்னும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்