Sundar C about sangamithra [file image]
Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த சங்கமித்ரா. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வந்த இந்த திரைப்படம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக எடுக்கப்படாமல் பாதியில் நின்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கண்டிப்பாக இந்த திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி கண்டிப்பாக சங்கமித்ரா படம் வரும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சங்கமித்ரா படத்தின் மதிப்பு என்னவென்று படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியவர்களுக்கு கண்டிப்பாகவே தெரியும். அந்த படத்தின் கதை அந்த அளவுக்கு நன்றாக இருக்கும்.
கண்டிப்பாக இந்த வருடம் முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த படத்தை மீண்டும் எடுக்க நான் ஆவலுடன் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதியில் படம் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் படத்தை எடுங்க என்று கூறி வருகிறார்கள். மேலும், இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 4- படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…