director sridhar and rajinikanth [File Image]
Rajinikanth : நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் ஸ்ரீதர் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை கொடுத்துள்ளார்.
பொதுவாகவே பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த பிரபலங்களுடன் படங்களில் பணிபுரிபவர்களும் அந்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு முறை ரஜினிகாந்திற்கு பிரபல இயக்குனரான ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் சரியாக 1982 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கடைசி காட்சி எடுக்கப்பட்டு வந்தது. அந்த காட்சியுடன் படப்பிடிப்பும் மொத்தமாக முடிந்துவிடும் எனவே, காட்சி எல்லாம் முடித்துவிட்டு அனைவரும் ஹோட்டலுக்கு சென்று தங்களுடைய பொருட்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தார்களாம்.
டிசம்பர் 11-ஆம் தேதி அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாள். எனவே, அவருடைய பிறந்த நாளுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று இயக்குனர் ஸ்ரீதர் முடிவு செய்தாராம். டிசம்பர் 12 காலை ரஜினிகாந்த் ரூமில் தூங்கி கொண்டு இருந்தபோது கதைவை யாரோ தட்டினார்களாம். அப்போது துறந்து பார்க்கும்போது ரஜினியின் மனைவி லதா மற்றும் ரஜினியின் மகள் நின்றார்களாம்.
இதனை பார்த்த ரஜினிகாந்த் ஆச்சரியத்தில் மூழ்கி நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? என்று கேட்டாராம். அதன் பின், இயக்குனர் ஸ்ரீதர் நான் தான் அவர்களை வர சொன்னேன். இன்று அனைவரும் ஒன்றாக இணைந்து உங்களுடைய பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என கூறினாராம். அதன்பிறகு கேக் ஏற்பாடு செய்து படப்பிடிப்பு தளத்திலே ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாடினாராம்.
ரஜினிகாந்த் இதுவரை எத்தனையோ பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். ஆனால், அவருக்கு மறக்க முடியாத வகையில் அமைந்த பிறந்த நாள் இந்த பிறந்த நாள் தானாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் ஸ்ரீதர் கடந்த 2008 -ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…