சினிமா

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ! ரஜினி பற்றி பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

Published by
பால முருகன்

ஜிகர்தண்டா திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகம்  பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜிகர்தண்டா  டபுள்எக்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பேட்டியில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் ” ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தின் மைய கருவே தமிழ் சினிமாவின் வின் முதல் கருப்பு ஹீரோ என்பது தான். இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை மனதில் வைத்து எடுத்தேன். ஏனென்றால், அவர் தான் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ.  ஜிகர்தண்டா கதை நடப்பது 1975, ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் முதல் படமான அபூர்வ ராகங்கள் அந்த ஆண்டு வெளியானது.

திரைக்கதைக்கு எனக்கு உதவியது மற்றும் அது முக்கியமான கட்டத்தில் கதையில் வருகிறது. நானும் லாரன்ஸ் மாஸ்டரும் ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகர்கள். எனவே, ஜிகர்தண்டா  டபுள்எக்ஸ் படத்தின் படப்பிடிப்பின் போதெல்லாம் ரஜினி சாரை பற்றி எதாவது பேசிக்கொண்டே இருப்போம். அந்த அளவிற்கு அவரை பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கிறது” என கார்த்திக் சுப்புராஜ்  தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய கார்த்திக் சுப்புராஜ் ” மீண்டும் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் முள்ளும் மலரும் மாதிரி ஒரு படம் பண்ண விருப்பமா இருக்கு. அந்த படம் அந்த அளவுக்கு மிகவும் அருமையாக இருக்கும். ரஜினி சார் கடைசியாக நடித்த ஜெயிலர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்தவுடன் மிரண்டுவிட்டேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

2 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

2 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

3 hours ago

“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…

3 hours ago

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? முதலமைச்சர் – இபிஎஸ் காரசார வாதம்.!

சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…

5 hours ago

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…

5 hours ago