மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்… அப்போ இயக்குனர் தனுஷின் திரைப்படம் என்னாச்சி??

Published by
மணிகண்டன்

தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

அதனை தொடர்ந்து, மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதே போல செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் இயக்குனர் தனுஷாக பா.பாண்டி எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து புதிய படம் இயக்க தனுஷ் திட்டமிட்டிருந்தார். இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதரி, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது. அது எப்போது நடக்கும் என விசாரித்தால், தற்போது தனுஷ் முழுக்க முழுக்க நடிப்பில் தான் கவனம் செலுத்த உள்ளாராம். அதனால், இன்னும் 2 வருடங்களுக்கு இயக்குனர் தனுஷை பார்ப்பது கடினம் என கூறப்படுகிறது. அப்போது நடைபெற்றாலும் மீண்டும் அதே நட்சத்திர கூட்டணி நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 minutes ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

35 minutes ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

39 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

1 hour ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

2 hours ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

2 hours ago