விருப்பபட்டு நடிக்கல தனுஷ் வற்புறுத்துனாரு நடிச்சேன்! உண்மையை உடைத்த அமீர்!

Published by
பால முருகன்

சென்னை : தனுஷ் வற்புறுத்தியதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன் என இயக்குனர் அமீர் உண்மையை உடைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அமீர் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களிலும் நடித்து கொண்டு வருகிறார்.  நடிப்பில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் எது என்றால், அமீர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை கூறலாம். இந்த படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு நடிகராக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

அந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் அமீர் ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்த காரணம் பற்றியும், வடசென்னை படத்தில் நடித்தபிறகு வந்த கதைகளை பற்றியும் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” மாறன் படத்தின் கதை பிடித்து விருப்பபட்டு எல்லாம் படத்தில் நடிக்கவில்லை. தனுஷ் எனக்கு கால் செய்து இந்த படத்தில் நடிங்கள் என்று வற்புறுத்திய காரணத்தால் மட்டும் தான் நடித்தேன். நான் முதலில் முடியாது கதை மேல் நம்பிக்கை இல்லை என்று கூறினேன்.

ஆனால், தனுஷ் அண்ணா நீங்க எனக்காக இந்த படத்தில் நடித்து கொடுங்கள் என்று கேட்டார். தனுஷ் அவ்வளவு தூரம் கூறிய காரணத்தால் தான் நான் அந்த படத்தில் நடித்தேன். அதைப்போல தான் மற்ற படங்களிலும் இயக்குனர்கள் என்ன தேடி வந்து நடித்து கொடுங்கள் என்று கூறுவார்கள் அதனால் தான் நடிக்கிறேன். வடசென்னை படத்திற்கு பிறகு அதே போலவே ஒரு 40 கதை என்னை தேடி வந்தது” எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

மாறன் படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

120 ரன்கள் அடிக்க முடியுமா? ரிஷப் பண்ட்க்கு சவால் விட்ட மைக்கேல் வாகன்!

ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…

25 minutes ago

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!

டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…

41 minutes ago

மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்… சுக்குநூறாய் நொறுங்கிய கட்டிடங்கள்.!

பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…

1 hour ago

அதிமுக Vs திமுக என்பது தான் வரலாறு! விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

1 hour ago

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு!

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…

3 hours ago