Rathnam [file image]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் எந்த இயக்குனருடன் இணைந்து எந்த மாதிரி படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் ஏற்கனவே, தாமிரபரணி, பூஜை ஆகிய ஹிட் படங்களில் நடித்து இருந்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற படத்தில் நடித்தார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி இந்த படத்தில் இணைந்த காரணத்தால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். முரளி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக கவலையான விமர்சனத்தை தான் பெற்று கொண்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் எல்லாம் நன்றாக இருப்பதை கூறி வருகிறார்கள்.
விமர்சனங்கள் கலவையாக கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி, படம் வெளியா முதல் நாளில் உலகம் முழுவதும் 3.57 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளில் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது எனவும் மொத்தமாக 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…