சினிமாவில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக பாகிஸ்தான் வீரரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது.
இந்த படத்தை முஹம்மது ஃபராஸ் கைசர் என்பவர் இயக்க, இப்படத்தை க்யூ பிலிம் புரோடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மோஷன் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் யார் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சோயிப் அக்தரின் வாழ்கை படமாக உருவாக்கப்பட வுள்ளதாகவும், அதில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடிக்கவிருந்ததாக தகவல்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…