dhanush [File Image]
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் செல்ல அய்யாவுவிடம் ஒரு கதையை நடிகர் தனுஷ் கேட்டாராம். செல்ல அய்யாவு விஸ்ணு விஷாலை வைத்து இயக்கி இருந்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு அருமையான கதையை செல்ல அய்யாவு தனுஷை சந்தித்து கதையையும் கூறினாராம். முதல் முறை கேட்டவுடன் தனுஷ் ஒரு கரெக்சன் சொன்னாராம், பிறகு அந்த கரெக்சனை சரி செய்துவிட்டு மீண்டும் தனுஷிடம் கதையை கூறும் போதும் தனுஷ் கரெக்சன் சொன்னாராம். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இப்படி கரெக்சன் சொல்லிக்கொண்டே தனுஷ் இருந்தாராம்.
ஓரு கட்டத்திற்கு மேல் சற்று கடுப்பான இயக்குனர் செல்ல அய்யாவு தனுஷிடம் கதையை கூறுவதை நிறுத்துவிட்டு அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம். தற்போது தனுஷை தொடர்ந்து நடிகர் சந்தானத்திடம் ஒரு கதையை அவர் கூறியிருக்கிறாராம். அவர் கூறிய அந்த கதை காமெடி கதைக்களத்தை வைத்து நகர்வதால் அது தனக்கு செட் ஆகும் என யோசித்து அதில் நடிக்கவும் சந்தானம் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
சந்தானம் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எனவே, அந்த படங்களை நடித்துமுடித்துவிட்டு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என செல்ல அய்யாவுவிடம் கூறிவிட்டாராம். இதனால் செல்ல அய்யாவும் சந்தனத்தை வைத்து இயக்கும் படத்திற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகவிருக்கிறதாம்.
ஏற்கனவே, செல்ல அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த சூழலில், அவர் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக வெளியான தகவல் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…