நானே வருவேன் படத்தில் முதலில் யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை மாற்றிவிட்டு அரவிந்த் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.
தனுஷ் நடிப்பில் தற்போது நானே வருவேன் திரைப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு ஜீப்பை மையமாக கொண்டு தேஜாவு எனும் அமானுஷ்ய கதைக்களத்தை கொண்டு தயராகி வருகிறதாம். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
முதலில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை செல்வராகவன் பரிந்துரை செய்தாராம். செல்வராகவன் நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி தான். அப்போது அவரது வேலை பிடித்துப்போகவே நானே வருவேன் படத்திலும் கமிட் செய்ய நினைத்தாராம்.
ஆனால், தனுஷுக்கு என்னவோ சரியாக படவில்லையாம். அதனால் மீண்டும் புதுப்பேட்டை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவை நானே வருவேன் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக தற்போது ஒப்பந்தம் செய்துள்ளாராம். விரைவில் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…