தேசிங்கு பெரியசாமி கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் படமெடுக்க தயாரிப்பு தரப்பு முன்வராத காரணத்தால் அந்த படம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியில் சறுக்கல்களை சந்தித்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்கிற எண்ணம் ரசிர்கள் மனதில் தோன்றியது. அதில் ஆரம்பம் முதல் கிசுகிசுக்கப்பட்டவர் தேசிங்கு பெரியசாமி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் இளமை ததும்பும் ஹிட் படத்தை கொடுத்தவர் ரஜினிக்கு கதை கூறி ரஜினியிடம் ஓகே வாங்கி வைத்திருந்தார்.
ஆனால், ஒரு படம் மட்டுமே இயக்கிய இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் ரஜினியை வைத்து படம் இயக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஏதேனும் சொதப்பிவிட்டால் பெரும் சிக்கலாகி விடும் என தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டதாம்.
ஆதலால், அந்த இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினி மீண்டும் பேட்ட எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…