lal salaam [File Image]
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணு விஷால், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார்.
லால் சலாம் படத்தில் ஏன் இதை செய்தேன்.? வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.!
அவர் பதிவிட்டு இருந்ததாவது ” தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் நாங்கள் கொடுத்தோம் அதைப்போல மின்சாரம் கேட்டீர்கள் கொடுக்கிறோம், எங்களுடைய அழகான பெங்களூருவை கொச்சைபடுத்துனீர்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டோம். இப்படி கெஞ்சிக்கொண்டே இருக்கிறாய் நாங்களும் கொடுக்கிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என கூறியிருந்தார்.
அது மட்டுமின்றி இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் கூறியிருந்தார். அந்த சமயம் அப்படி சொல்லிக்கொண்டு தற்போது அவர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாகவே அவரை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.
இதனையடுத்து, தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் லால் சலாம் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணன் முன்னதாக பேசியது வைத்து சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் தன்யா, ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா மீதும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்துள்ளார்.
புகாரில் ” லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் . எனவே படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…