ஒரு நாளைக்கு இவ்வளவு வேணும்! கறார் காட்டும் யோகி பாபு?

Published by
பால முருகன்

யோகி பாபு : தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு, கோட், இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். சம்பள விஷயத்திலும் கூட அவர் தான் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்கு சற்று உயர்த்தி கேட்டு வருகிறாராம். இதுவரை ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றால் சம்பளமாக யோகி பாபு 10 லட்சம் தான் அதாவது ஒரு நாள் கணக்கு படி 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம். எத்தனை நாள் கால்ஷீட் கேட்டு நடித்து கொடுக்கிறாரோ அதற்கு ஏற்றது போல சம்பளத்தை வாங்கி வந்தாராம்.

ஆனால், தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வருகிறது என்ற காரணத்தால் தனது ஒரு நாள் சம்பளத்தை 12 லட்சமாக உயர்த்தி இருக்கிறாராம். தன்னிடம் தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும் தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூறிவிடுகிறாராம். குறைத்து பேசினால் கூட 10 லட்சம் இருந்தால் மட்டும் தான் படத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவிக்கிறாராம். அது மட்டுமின்றி, ஒரு படத்தில் நடிக்க பணம் வாங்கிவிட்டு அடுத்ததாக அதே கால்ஷீட்டை வேறு படத்திற்கும் கொடுத்து விடுகிறாராம்.

இது மட்டுமின்றி, கமிட் ஆகி நடித்து வரும் படங்களை தவிர்த்து நடித்து முடித்து இருக்கும் பாதி படங்களுக்கு டப்பிங் பேசாமலும் யோகி பாபு இருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

33 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago