Anirudh - Rajinikanth [file image]
சென்னை : வேட்டையன் படத்தின் புதிய பாடல் விரைவில் வெளிவரும் என அனிருத் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையான்” திரைப்படத்தின் பாடல்கள் அப்டேட் எப்போடா? வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இசைமைப்பாளர் அனிருத் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
ஆம், அனிருத் தனது X தளத்தில், வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மனசிலாயோ, ஹண்டர் வந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.
தற்போது, படம் போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதன் மூலம் அமிதாப் பச்சனும், ரஜினிகாந்தும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ஜிஷு சென்குப்தா, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர, ரோகினி, அபிராமி மற்றும் வி.ஜே.ரக்ஷன் ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட் வேலைகளை கவனித்துள்ளார். பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களைத் தொடர்ந்து அனிருத் ரஜினிகாந்துடன் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் இதுவாகும்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…