30 ஆண்டுகள் கழித்து அஜித்குமார் உடன் சந்திப்பு! நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் சிரஞ்சீவி.!

Published by
கெளதம்

ஹைதராபாத் : குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை, நடிகர் அஜித் குமார் சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பரா’ படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வந்த நிலையில், அஜித் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடைகிறது. 

அஜித்துடனான சந்திப்பை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட மெகாஸ்டார், “நேற்று மாலை ‘விஸ்வம்பரா’ செட்டிற்கு சர்ப்ரைஸாக அஜித்குமார் வந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் அரட்டை அடித்தோம். அவரது முதல் தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் காலத்தை நினைவு கூர்ந்தோம்.

பல ஆண்டுகளாக அஜித் அடைந்திருக்கும் இந்த அபரிதமான வளர்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்மேலும் என்னவென்றால், ஷாலினி என் ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி படத்தி அன்பான குழந்தைகளில் ஒருவராக நடித்தார். ரசிக்க ஏராளமான நினைவுகள் இருந்தன என்பது தெளிவாகிறது. ” என்று கூறிஉள்ளார் 

30 வருடங்களுக்கு முன்

30 வருடங்களுக்கு முன் அஜித்தின் முதல் தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” என்கிற திரைப்படம் 1992ல் வெளிவந்தது. அப்பொழுது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதே நேரத்தில் அஜித்துடன் சிரஞ்சீவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்பொழுதும் இப்பொழுதும் சரி, இருவரும் ஒரே மாதிரியான பிணைப்பை கொண்டுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

12 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

13 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

13 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

14 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

16 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

17 hours ago