தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். படத்தை பார்த்த பல ரசிகர்கள் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றே கூறிவருகிறார்கள்.
இப்படி கலவையான விமர்சனத்தை பீஸ்ட் படம் பெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பீஸ்ட் படத்தை பார்த்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனென்றால், நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து தான் படம் இயக்கவுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், ரஜினி பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு அடுத்தாக நெல்சன் இயக்கவிருக்கும் படத்தின் வாய்ப்பை வேறொரு இயக்குனரிடம் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் திலீப்குமாரை நம்பி தலைவர் 169 படத்தை தொடங்கலாமா இல்லை வேறு இயக்குநரை இயக்க வைக்கலாமா என்ற முடிவை ரஜினியிடமே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
ஆனால் இது வதந்தி தகவல் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். மற்றோரு தரப்பினர் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு நெல்சன் அடுத்த படத்திலாவது கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…