‘தமிழ் சினிமாவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்’…வேண்டுகோள் வைத்த ராதிகா!

சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பிரபல நடிகர்கள், பேசாமல் மவுனம் காப்பது தவறாக தெரிகிறது என நடிகை ராதிகா பேசியுள்ளார்.

raadhika sarathkumar

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவே புரட்டிப்போட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

உதாரணமாக, நடிகை ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, கேரவனுக்குள் ரகசியமாக யாருக்கும் தெரியாத கேமராவை வைத்து நடிகைகள் உடைகளை மாற்றும்போது அதனை போனில் கூட்டமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எனவும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது இந்த விஷயம் தெரிய வந்தது எனப் பேசியிருந்தார்.

ராதிகா பேசிய விஷயம் மிகவும் வைரலாக பரவிய நிலையில், அவர் பேசியதைப் பார்த்த பலரும் இந்த விஷயம் அப்போது தெரிந்திருந்தால் அப்போதே வெளியே சொல்லியிருக்கலாமே? அதனைவிட்டு இப்போது எதற்காகச் சொல்லவேண்டும்? எனக் கேள்விகள் எழுந்தது.

ராதிகா பேசியதைத் தொடர்ந்து அவரிடம் கேரள சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியதாகவும், அவர் யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகா கேரவன் விவகாரம் குறித்தும், கமிட்டி அமைக்கவேண்டியது குறித்தும் பல விஷயங்களைப் பேசினார். அவர் பேசிய விஷங்கள் பின் வருமாறு…

முதலில் கேரவன் விஷயம் பற்றி விளக்கமாகப் பேசிய அவர் ” கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் நான் நடிக்கும்போது கேரவன் விஷயத்தைப் பற்றி விளக்கமாகத் தான் பேசினேன். இந்த விவகாரம் குறித்து என்னைக் கேரள போலீசார் தொடர்புகொண்டு பேசியபோது கூட, நான் அவர்களிடம், விவரமாக எடுத்துச் சொன்னேன்” எனப் பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராதிகா தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்கவேண்டும் என வலியுறுத்திப் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” பாலியல் தொல்லை என்பது சினிமாத்துறையில் மட்டுமில்லை அனைத்து துறைகளிலும் உள்ளது.

என்னைப்பொறுத்தவரை, கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போலத் தமிழ் சினிமாவிலும் ஒரு கமிட்டி அமைக்கவேண்டும்” என வேண்டுகோள் வைத்தார். அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் அவரிடம் ரஜினிகாந்த் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றித் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

அதனைப் பற்றி உங்களுடைய கருத்து? என கேள்வி கேட்டனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ராதிகா “அவருக்கு தெரியவில்லை என்பதால் தெரியாது என்று சொல்லிவிட்டார். பிரபல நடிகர்கள் பலரும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிப் பேசாமல் மௌனமாக இருப்பதாய் பார்க்கவே ரொம்ப தவறாக இருக்கிறது.

சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்கள் இதுபோன்ற விஷயங்களுக்குக் குரல் கொடுத்தால் தான் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்” எனவும் நடிகை ராதிகா பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்