மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்ற சினி ஷெட்டி

Published by
Varathalakshmi

2 ஜூலை 2022 அன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார் சினி ஷெட்டி .  இவர் பிறந்தது மும்பை தற்போது வசிப்பது கர்நாடகா. தன்னுடன் போட்டியிட்ட 31 போட்டியாளர்களை வீழ்த்தி மிஸ் இந்தியா 2022 பட்டத்தை தன்வசமாக்கியுள்ளார்.. அழகான உருவம் , கவர்ச்சியான ஸ்டைல் இவற்றைத் தவிர நடுவர்களுக்கு அவர் அளித்த பதில் இதுவே இறுதி போட்டியில் அவர் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

யார் இந்த சினி ஷெட்டி ?

சினி ஷெட்டி இவர் இந்தியாவில்  மஹாராஷ்டிரம் மாநிலத்தி உள்ள மும்பையில் 2000ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தந்தை பெயர் சதானந்த் ஷெட்டி, தயார் பெயர் ஹேமா ஷெட்டி. சகோதரர் ஒருவர் உள்ளார் அவர் பெயர் ஷிகின் ஷெட்டி.

மும்பையில் உள்ள St.டொமினிக் சாவியோ வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் . பின்னர் , வித்யாவிஹாரில் உள்ள எஸ்.கே. சோமையா பட்டப்படிப்புக் கலை, அறிவியல் மற்றும் வணிகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்றுள்ளார் .தற்போது இவர் CFA( chartered financial analyst) படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது .

இன்ஸ்டாகிராம் to மிஸ் இந்தியா :

சினி ஷெட்டி மாடலிங் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக இருக்கிறார்.  ​​அவர் ஒரு நடனப் பிரியர் ஆவர்.  நடனம் அவரின் பொழுதுபோக்காக மாறியது. மேலும் ,சினி  ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர். மீண்டும் மாடலிங்கிற்கு வந்த அவர், மாடலிங் ஏஜென்சியான பர்பிள் தாட்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஏர்டெல், ஃப்ரீ ஃபயர், பாண்டலூன்ஸ் போன்ற பல பிராண்டுகளுடன் அவர் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் அழகுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் . இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபெமினாவினால் “மிஸ் இந்தியா கர்நாடகா 2022” என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது, ​​அவர் “மிஸ் இந்தியா 2022” பட்டத்துடன் ஃபெமினாவால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு பட்டங்களையும் ஒரே வருடத்தில் சம்பாதிப்பது என்பது சுலபம் அல்ல. இவற்றின் மூலம், அவர் பல்வேறு ஊடக வலைத்தளங்களில் இடம்பெற்றார் மற்றும் சிறிது நேரத்தில் சமூகவலைதங்கள் முழுவதும் பிரபலமடைந்துவிட்டார்.

அவரது சமூக ஊடக வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். நடனம் ஆடுவது அவரது பொழுதுபோக்காக இருந்ததால், சமூக வலைதளத்தில் நிறைய நடனக் காட்சிகளைப் பகிர்ந்து வந்தார் மற்றும் அவரது நடன ரீல் ஒன்று கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வைரலானது. தற்போது, ​​தனது புகைப்படங்களை பகிர்வதன் மூலம் இணையதளத்தில் அவருக்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். சிறிது நேரத்தில், அவர் 100k பின்தொடர்பவர்களின் மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் இந்திய மாடல் மேலாண்மை நிறுவனமான பர்ப்பிள் தாட்ஸால் நிர்வகிக்கப்படுகிறார்.

சுற்றுப்பயணம் செல்ல விரும்புவர் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

மேலும் ,மிகவும் பிடித்த படம் Into The Wild.

இன்ஸ்டாகிராமை தவிர வேறு எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை .

பிரியங்கா சோப்ராவை முன்மாதிரியாக கொண்டு மாடலிங் செய்து வருகிறாராம் .

சினி இயற்கையை விரும்புபவராம் . 

அவ்வளவுதான். சீனி ஷெட்டி பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் இது.

Published by
Varathalakshmi
Tags: sini shety

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

21 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

24 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

39 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

51 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago