venkat prabhu Mankatha
Mankatha Re Release : மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், ஏப்ரல் 20-ஆம் தேதி கூட விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் மங்காத்தா படத்தை ரீ -ரிலீஸ் செய்யவேண்டும் என்று கேட்டு கொண்டே வந்தார்கள்.
மங்காத்தா படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் படம் ரீ-ரிலீஸ் ஆகவில்லை. எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் அஜித் ரசிகர்கள் பலரும் இன்னும் வரை அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சமூக வலைத்தளங்களில் கேட்டு கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபுவை டேக் செய்து மே 1-ஆம் தேதி மங்காத்தா படத்தை எப்படியாவது ரீ-ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள் என்று கேட்டு இருந்தார். ரசிகரின் அந்த கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு ” என்னால் முடிந்தவரை அதற்கான முயற்சிகளை செய்தேன். ஆனால், உரிமை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனத்திடம் இருக்கிறது எனவே அவர்கள் தான் அதற்கான வேலைகளை தொடங்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மங்காத்தா படத்தை சன் பிக்சர்ஸ் திரையரங்கு உரிமையைப் பெற்றது மற்றும் ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் மூலம் படத்தை விநியோகம் செய்தது. எனவே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் நினைத்தால் மட்டும் தான் மங்காத்தா படத்தை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்ய முடியும். வரும் நாட்களில் அதற்கான முயற்சிகளை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் தீனா, பில்லா ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…