கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் பல முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருவதுண்டு. இதனையடுத்து, தற்போது கொரோனா அச்சத்தால், இந்த திரைப்பட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கேன்ஸ் திரைப்பட விழாவை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் சாத்தியக் கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து எங்கள் முடிவை தெரியப்படுத்துவோம்.’ எனக் கூறியுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…