நடிகர் எஸ்.வி.சேகர் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் பேனரால் சுபஸ்ரீ என்ற இளம் வயது பெண் காலமானார். இதனையடுத்து, இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து தணலது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இளம் பெண் உயிரிழப்பையடுத்து, சென்னை மாநகராட்சி, டிஜிட்டல், பேனர் அச்சகங்களுக்குக் நோட்டீஸ் அனுப்பியது. அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக மாநகராட்சி, கடந்த 19ம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அனுமதியின்றி பேனர் அச்சடித்தால், ஓராண்டு சிறை என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சரியான நடவடிக்கை. முறைப்படுத்துதலுக்கு பதில் ஒரு தொழிலையே முடக்குவது சரியாகாது. யாராவது ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா?’ என பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…